Sunday, 28th April 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
முகப்பேர்: சென்னையை வாட்டி வதைக்கும் வெயிலின் கோரத்தால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் சென்னைவாசிகள் பரிதவித்து வருகிறார்கள்.
சமூக சேவகர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் சென்னையின் பல இடங்களிலும் லாரிகள் மூலம் இலவசமாக தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சமூக சேவகரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளருமான கே.வி.திலகர் குடிநீர் விநியோகம் செய்தார்.